சமையல் குறிப்புகள் - 1

1. காய்கறிகளின் நிறம் பளச்சென இருக்க காய்கறிகளை வேகவைக்கும்போது அதனுடன் சிலதுளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

2. ரவா கேசரி கிளறும்போது அதில் ஆப்பிள், பைனாப்பிள், திராட்சை மற்றும் மாம்பழத்துண்டுகளை இறக்கும் முன் கலந்து கிளறவும். வித்தியாசமான பழக்கேசரி ருசியாக இருக்கும்.

3. பாகற்காயை உப்பு, மோர் பிசறி ஊறவிட்டு பின்னர் பிழிந்து சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பொரியல் செய்தால் கசப்பே தெரியாது. அனைவரும் விரும்பி உண்பர்.

4. கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல், உப்பு, புளி ஆகியவற்றை சூடான வாணலியில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்த பொடியில் சிறிதளவே வதங்கும் கறிகாய் மீது தூவினால் ருசியாக இருக்கும்