செட்டிநாடு ஆட்டுக்கறி குழம்பு

செட்டிநாடு ஆட்டுக்கறி குழம்பு

தேவையானவை:

ஆட்டுக்கறி - அரை கிலோ
தக்காளி       - 2
வெங்காயம்   - 4
சீரகம், மிளகு, சோம்பு    - தலா ஒரு தேக்கரண்டி
பட்டை, இலவங்கம்       - தேவையான அளவு
காய்ந்த மிளகாய்     - 6
இஞ்சி பெரிய துண்டு    - 1
பூண்டு     - இரண்டு முழுதாக
பச்சை மிளகாய்    - 4 கீறியது
தேங்காய்    - 2 பத்தை
எண்ணெய்   - தேவையான அளவு

செய்முறை

கறியை சிறிதளவு மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வேகவைக்கவும். இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, பட்டை, இலவங்கம், மிளகு மற்றும் காய்ந்த மிளகாய் இவற்றை எண்ணெய் விட்டு வதக்கி அரைக்கவும் (மசாலா).
வெங்காயத்தையும் தக்காளியையும் நான்கு துண்டுகளாக வெட்டி எண்ணெய் விட்டு வதக்கி அரைக்கவும் (விழுது).
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பச்சைமிளகாய் போட்டு வதக்கி அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போடவும். பிறகு தக்காளி வெங்காய விழுதை சேர்க்கவும். இதில் கறியை போட்டு (காரம் தேவைப்பட்டால் மிளகாய் பொடியை தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும்) தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி தண்ணீரை ஊற்றி அடுப்பில் மிதமான நெருப்பில் அரை மணி நேரம் வேக வைக்கவும். தேங்காயை மைய அரைத்து கறி வெந்ததும் சேர்த்து இறக்கவும்.